Saturday 8 November 2014

"பிராமணர்கள்" ஆதிக்கத்தைத் தடுத்த இராஜராஜ சோழன்!



தேவாரம் மீட்ட இராசராசன் 


All the kings of ancient India were under the control and blackmail of the Brahmins, who compelled them to protect Chaturvarna. Prince Adiththa Karikaalan was assassinated by a cunning group and that was the reason his younger brother Rajarajan had to yield to brahmins. There was no Periyar or Buddha at that time. It is not only the king who has to do everything in society. The thinkers in the society have a duty too. But, the system of Chaturvarna did not allow thinkers to emerge among non-Brahmins. 


Yet, we must appreciate Rajaraja who retrieved Thevaram from the clutches of the cunning brahmins of Chidambaram. His son Rajendra was also a great king in having protected the empire built by his father. 

Presentist analysis of these kings is not fair. They did not have any helping hands in those days.



"எல்லைகள்' என்ற வலைத்தளத்திலிருந்து:

உத்தம சோழனால்  ஆதரிக்கப்பட்ட  பிராமணர்களின்  ஆதிக்கத்தை  ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்தபோது,தடுக்கும்  செயல்களில் ஈடுபட்டு  வந்துள்ளான்!

         தனது அண்ணன்  ஆதித்ய கரிகாலனைக்  கொன்றவர்களை  கண்டுபிடிக்காமலும்,கண்டுபிடித்து  தண்டிக்காமலும்,கொலையாளிகளை நாட்டிற்கு  அறிவிக்காமலும்  இருந்த நிலையை உணர்ந்து, ஆட்சிக்குவந்த  இருஆண்டுகளில்  கண்டுபிடித்து, அவர்களது  சொத்துக்களைப் பறிமுதல்  செய்து, "திருவநேந்தேசுவரத்து" கோயிலுக்கு  ஒப்படைக்கும்  பணியைச் செய்தான்!

       இந்த பணியை ராஜராஜனின் ஆணைக்கு  இணங்கி, " கோட்டையூர் பிரம்ம ஸ்ரீ ராஜனும்,புள்ளமமங்கலத்து சந்திர சேகரனும் செய்தனர்"  என்று( Epigrapic india volume XXI. No.27) தெரிவிக்கிறது! 

        ராஜராஜனின்  மெயகீர்த்தியாக (புகழ்ந்துரைக்கும் ) பாடல் ராஜராஜனின் வெற்றிகளைப் பற்றி கூறுகிறது!
       அதில் இடம் பெற்று உள்ள"  காந்தளூர் சாலை கலமருத்தருளிய"   எனபது  பிராமணர்களின் பொறுப்பில் இயங்கிவந்த  இடம் எனவும், அங்கு பிராமணர்களுக்கு  ஆட்சி,அதிகாரம் குறித்த பயிற்சி( இன்றைய ஐஏஎஸ்,ஐபிஎஸ்  போல)அளிக்கப்பட  கல்விசாலை எனவும், தனது ஆட்சியில் பிராமணர்கள்  தன்னிச்சையாக  இதுபோன்ற பள்ளியை நடத்துவதை தடுக்கவும்,பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒடுக்கவும்தான்  காந்தளூர் சாலையின் மீது  படைஎடுத்தான்.  இந்த இடம் சேர நாட்டில் இருந்தது! என்றும்  அதனாலேயே,  ராஜராஜனின் மெய்கீர்த்தி  அதனைப் போர் என்று கூறாமல்  "காந்தளூர் சாலை களம் அறுத்து அருளிய" என்று  கூறப்பட்டு உள்ளது என்று தனது  சோழர்கள் சமயம் என்ற நூலில்  டாக்டர் .ஆ.பத்மாவதி  அவர்கள்  குறிபிடுகிறார்.!

        பிராமணர்களின்  ஆதிக்கத்தைத்  தடுக்க,  ராஜராஜன்  அவர்கள் அறியாதபடி பல்வேறு நடவடிக்கைகளை  எடுத்தான்.ஆதலால்  ராஜராஜனுக்கு  அவனது இறுதிகாலத்தில் அந்தணர்களின் ஆதரவு  குறைந்தது  என்று  தனது சோழர்கள் நூலில்  கே.எ.நீலகண்ட சாஸ்திரியும்  குறிபிடுகிறார்!
          ராஜராஜனது  ஆட்சியில்  மக்களின் நலனை முன்னிட்டும், அந்தணர்களின்  ஆதிக்கத்தைக் குறைக்கவும், நிர்வாகத்தை  எந்த சிக்கலும்  இன்றி  நடத்தவும்  செய்த  செயல்களில்  ஒன்றாகவே,குட ஓலைத் தேர்தலும்  உள்ளது!

         இந்த குடவோலைத்  தேர்தல் மூலம்  தனது  ஆட்சிப்பகுதியை  நேரடியாக  ராஜராஜனால்  நிர்வாகம்  செய்ய முடிந்தது!

For more: 
http://generationneeds.blogspot.in/2012/04/blog-post_17.html?showComment=1415498436949


நன்றி: எல்லைகள் வலைத்தளம். 

No comments:

Post a Comment