Tuesday 26 September 2017

Contribution of Islamic writers to Tamil !


சீறாப்புராணம் எழுதிய உமறுப் புலவர் உக்ரைன் நாட்டவர்.
தமிழில் முதன் முதலில் "அசன்பே சரித்திரம்" என்ற நாவலை எழுதிய சித்தி லெப்பை மரைக்காயர் சீனாக்காரர்.
சதாவதானம் புரிந்த சதாவதானி செய்குத்தம்பி பாவலர் சோமாலியா நாட்டவர்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் பெரும் உறுப்பினராக இருந்து, “நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரர்” என்று சிறப்பிக்கப்பட்ட குலாம் காதிர் நாவலர் கொரியாக்காரர்.
இராமத்தேவராக இருந்து இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவி வைத்திய நூல் எழுதிய யாக்கோபு சித்தர் உகாண்டா நாட்டவர்.
நற்றமிழில் நான்கு காப்பியங்கள் எழுதிய காயல் சேகனாப்புலவர் செர்பியா நாட்டவர்.
முத்தமிழில் மூன்று இலக்கியங்கள் படைத்த வண்ணக் களஞ்சியப் புலவர் வெனிசுலா நாட்டவர்.
மிஃராஜ் மாலை எழுதிய ஆலிம் புலவர் அமெரிக்காக்காரர்.
பெண் எழுத்தாளர்களின் முன்னோடி நாகூர் சித்தி ஜுனைதா பேகம் சுவீடன் நாட்டவர் 
யூசுப்-ஜுலைகா காவியம் வரைந்த சாரண பாஸ்கரணார் சோவியத் யூனியனிலிருந்து வந்தவர்.
இராமேசுவரம் உத்திரகோச மங்கை கோவிலை கட்டிய வள்ளல் சீதக்காதி செர்மன் நாட்டுக்கார்ர்.
மசலா (புதிர்-வினா). நாமா (வரலாற்றுக்கதை) , கிஸ்ஸா (கதை வடிவம்), முனாஜாத்து (இறைவேட்கை பாடல்), படைப்போர் (போர் நிகழ்ச்சிகள்), திருமண வாழ்த்து (திருமண பழக்க வழக்கங்களைக் கூறுவது) , நொண்டி நாடகம் (சிற்றிலக்கிய நாடக வகைகளில் ஒருவகை).
என்றெல்லாம் எழுதிக் குவித்து தமிழ் இலக்கியங்களுக்கு புதுப்பொலிவு ஏற்றிய இஸ்லாமியர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு சம்பந்தமில்லாத அயல்நாட்டவர்.
தமிழ் இலக்கியத்திற்கு புது வடிவங்களும் பல பங்களிப்புகளும் செய்து வந்தவர்களை பார்த்து இன்று முளைத்த காளான்கள் கேட்கிறது உனக்கு மொழிபற்று இருக்கிறதா என?
மொழி பற்றை பற்றி யார் யாருக்கு பாடமெடுப்பது??
இதில் அரைகுறை சில்லரைகளின் அரேபிய அடிமை கதறல் வேறு. வரலாறை படித்துவிட்டு வாருங்கள் காவியில் ஒளிந்திருக்கும் சொம்புகளே..


No comments:

Post a Comment