Thursday 19 September 2019

தைப்பொங்கல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாள் : பதிவு செய்த பேராளர் இராபர்டோ டி நொபிலி !




பேராளர் இராபர்டோ டி நொபிலி கி.பி. 1606 ல் மதுரைக்கு வருகிறார். அன்றிலிருந்து தமிழ்நாட்டில், (சில ஆண்டுகள் இலங்கையில்) வசிக்கிறார். கிபி 1656ல், தனது 79 ஆவது அகவையில், அவர் சென்னை மைலாப்பூரில் இயற்கை எய்துகிறார்.




15.01.1609ல் மதுரையிலிருந்து அவர் எழுதிய கடிதத்தில் “இந்துக்கள் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும், பொங்கல் என்று அழைக்கப்பெறும், புது அரிசியை இறைவனுக்குப் படைக்கும் மிக மேன்மையான பண்டிகை ஒன்றைக் கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். இந்தப் பண்டிகையைக் கொண்டாட இயலவில்லை என்றால் அது அவமானம் என்று அவர்கள் கருதுகிறார்கள்” என்று தொடங்கி அப்பொங்கல் பண்டிகை பற்றி மிக விரிவாக எழுதுகிறார். (“The Hindus,” writes Nobili to Laerzio of the Pongal in 1609, “are accustomed, at the beginning of each year, to celebrate a very solemn festival, called Pongal, to offer the new rice to the gods. It consists in cooking with great ceremony their rice mixed with milk, before an idol. According to them, it is a disgrace not to be able to celebrate that festival. Page- 116- A Pearl to India: The Life of Roberto de Nobili – Vincent Cronin. Also in Page 115 ibid.)




இந்த ஒரே கடிதமே, அதில் உள்ள “at the beginning of each year" என்ற சொற்றொடரே, தமிழர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்புவரைகூட, தை முதல் நாளைத்தான் புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டாடினர் என்பதற்கு உறுதியான சான்று கூறும்.

தமிழா!

தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழர்கள் காலங்காலமாகக் கொண்டாடிவந்துள்ளனர். இந்த உண்மையை இராபர்ட் டி நொபிலி மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். இந்த சான்று தமிழ்ப்புத்தாண்டு தொடர்பான மாற்றாரின் அனைத்துச் சொல்லாடல்களையும் முறியடிக்கின்றது. நாயக்கர்கள் ஆட்சியின்போதுகூட தைமாதத்தில் புத்தாண்டு கொண்டாடும் வழமை மாறவில்லை. 

தமிழா! ஆரியக் கடத்தல்காரர்களிடம் ஏமாறாதே !


ஆரியம் கொடியது.

ஆரியத்தின் கொடும்பிடியிலிருந்து தமிழையும் தமிழரையும், தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டையும் மீட்டெடு !


இது தொடர்பான இன்னொரு பதிவைக் காண:



 

Saturday 7 September 2019

தமிழின் முல்லை நில வேந்தன் மாயோன் எனும் கண்ணன் எப்படி கிருஷ்ணன் ஆக்கப்பட்டார்?


R. Umamageswaran in Quora.


கண்ணன் யாதவ குலத்தில் தேவகி வயிற்றில் பிறந்தான். அவனை யசோதை வளர்த்தாள். கண்ணன் ஆயர்குலத்திற்கு ஏற்ப ஏழு எருதுகளை அடக்கி ஆயர்குலப் பெண்ணான நப்பின்னையை மணந்தான். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் கண்ணனின் மனைவியான நப்பின்னையை ஒன்பது ஆழ்வார்களும் குறிப்பிட்டுப் பாடியுள்ளனர்.



சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கலித்தொகை முதலான சங்க இலக்கியங்களில், நப்பின்னை பற்றிய பாடல்களில், அவளை மணக்கக் கண்ணன் ஏறுதழுவிய செய்திகள் உள்ளன.
பெரியாழ்வார் (66, 70, 160, 162, 246, 333). ஆண்டாள் (491,492,493). குலசேகர ஆழ்வார் (660, 662, 677). திருமழிசை ஆழ்வார் (764, 784, 806, 850).
திருமங்கையாழ்வார் (960, 1061, 1072, 1136, 1144, 1152, 1172, 1176, 1181, 1226, 1247, 1281, 1290, 1353, 1359, 1491, 1492, 1505, 1506, 1542, 1614, 1703, 1730, 1966, 1971, 2020, 2080).
பொய்கையாழ்வார் - 2143; பூதத்தாழ்வார் (2244). பேயாழ்வார் (2306, 2330, 2366, 2414). நம்மாழ்வார் (2498, 2546, 2632, 2672,2674, 2719, 2748, 2758, 2835, 2884, 2944, 2992, 3022, 3087, 3177, 3191, 3261, 3265, 3280, 3356, 3453, 3469, 3635, 3637, 3659, 3702).
மேலே குறிப்பிட்டுள்ளவற்றுள் சிகரங்களாக ""ஒரு மகளாயர் மடந்தை ஒருத்தி நிலமகள், மற்றைத் திருமகளோடும்'' என்று திருமங்கையாழ்வார் பாசுரத்திலும் (1176), ""பூமகள், மண்மகள் ஆய்(ஆயர்)மகள்'' என்று நம்மாழ்வார் பாசுரத்திலும் (3469) நப்பின்னையைப் பூமகளோடும் (திருமகளோடும்), மண்மகளோடும் (பூதேவியோடும்) சேர்த்துக் கூறியுள்ளது சிறப்புக்குரியது.
மேலே குறிப்பிட்டுள்ள ஒன்பது ஆழ்வார்கள் 75 பாசுரங்களில் நப்பின்னை பிராட்டியைப் போற்றிப் பாடியிருந்தும், அவரை வைணவர்கள் கோயிலிலும், வீட்டிலும் போற்றி வழிபடாமல் புறக்கணித்துள்ளது ஏன் எனத் தெரியவில்லை. எங்கோ ஒரு சிலர் "நப்பின்னை' எனத் தம் பெண் பிள்ளைகளுக்குப் பெயரிட்டுள்ளது பாராட்டுக்குரியது. வைணவக் கோயில்களில் "நப்பின்னை' இடம்பெறவில்லை.
மூவரும் ஒருவரா?
1. தொல்காப்பியத்தில் முல்லை நில ஆயர்களின் தெய்வமாக மாயோன் (கண்ணன்) சொல்லப்பட்டிருக்கிறார். கண்ணன் என்பதும் நப்பின்னை என்பதும் தூய தமிழ்ச் சொற்கள். ஆழ்வார்கள் பன்னிருவரும் தமிழகத்தில் தோன்றி நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாடினர். அதில் எந்தவொரு பாசுரத்திலும் கிரந்த எழுத்து இல்லை. எனவே, கண்ணன் தமிழ் நாட்டுத் தெய்வம்.
2. கிருஷ்ணன்: இவன் துவாரகை என்ற பகுதியை ஆண்ட வடநாட்டுச் சிற்றரசன். கிருஷ்ணன் என்ற பெயரிலேயே கிரந்த எழுத்து வந்துள்ளது. நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களில் ஓரிடத்திலும் கிருஷ்ணன் என்ற பெயர் இல்லை. இவன் பல சூழ்ச்சிகளைச் செய்து, குருஷேத்திரப் போரில் பாண்டவர்களை வெற்றிபெறச் செய்தவன். இவன் வடநாட்டுத் தெய்வம். (கிருஷ்ணனின் மனைவியர் பாமா, ருக்மிணி)
3. திருமால்: தெய்வ உலகத்தில் திருமாலாக சங்கு, சக்கரங்களோடு இருக்கிறான். அவன் மனைவி திருமகள் (கோயில்களில் ஸ்ரீதேவி, பூதேவி மனைவியராக உள்ளனர்).
மேற்கண்ட மூவரும் ஒன்றல்ல.

https://ta.quora.com/tamilin-mullai-nila-ventan-mayon-enum-kannan-eppati-kirusnan-akkappattar