Monday, 28 February 2022

கலைஞர் தமிழரே! ஆரிய உளவாளிகளிடமிருந்து இசைத் தமிழைக் காப்போம் !!

 

இன்னோசைகள் உள்ளத்திற்கு இன்பம் பயப்பன. அந்த இன்னோசைகளை மெலித்தல், வலித்தல், நீட்டல் (Elongation), குறுக்கல் ஆகிய வழிகளைக் கைக்கொண்டு உருவாக்கி,  முறைப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கும்போது, அவை முறையான இசையாகின்றன. அவ்வறான முறைப்படுத்தப்பட்ட இசையை மாந்தனின் வரலாற்றில் முதன்முறையாக உருவாக்கியது தமிழ்க் குமுகாயமே. அவ்வாறான இசை வாய்மூலமானதாக மட்டுமின்றி, பலவித இன்னோசை தரும் இசைக்கருவிகளாலும் உருவாக்கப்பட்டு வாய்ப்பாட்டிற்கு உதவும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டன.

 

இவ்வாறான இசையுடன் தோன்றியதே ஆடற்கலை. மனிதன் ஆடுவது என்பது, தாள் எனும் காலடிகளால்.

 

ஆடும் விதத்தை, தாள் வைக்கப்படும் விதங்களை முறைப்படுத்தி, தாளம் என்று வகைப்படுத்தினர் தமிழர்கள். தாளத்திற்கேற்பத்தான் பாட்டுக்கட்டலாயினர். அந்த நிலையில் உருவானதே முத்தமிழில் இரண்டாம் தமிழான இசைத்தமிழ்.

 

காலங்காலமாக இசைத்தமிழை உருகி உருகி வளர்த்தவர்கள் தமிழர்கள். அவர்கள் உருவாக்கிய எண்ணற்ற இசைக்கருவிகளில் குழலும் யாழும் மிகமிகத் தலையாயவை. அதனாற்றான், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, திருக்குறளில் இந்த இரண்டு இசைக்கருவிகளின் முகாமைத்துவத்தை, வள்ளுவர் 'குழலினிது யழினிது என்ப' என்று பதிவுசெய்துள்ளார். அவர் காலத்திலேயே முறைப்படுத்தப்பெற்ற இசைத்தமிழின் வளர்ச்சி அவ்வளவு இருந்திருக்கிறது என்றால், அந்த இசைத்தமிழ் தோன்றிய காலமும் அது வளர்ந்த காலமும் எவ்வளவு ஆண்டுகள் என்பது கற்பனைக்கு எட்டாததே.

 

அவ்வாறு இசை வளர்த்து, இசையில் விற்பன்னர்களாகத் தமிழர்கள் திகழ்ந்து வந்தனர். "பாணர், பாடினியர், விறலியர் போன்றோர்  பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் துணையோடு சிறப்பாகப் பாடி உள்ளனர்." குழல், யாழ், கின்னரம். வாங்கியம்,  சங்குதூம்புவயிர்தண்ணுமைமுழவுமுரசுபறைகிணைதுடிதடாரிபாண்டில் மற்றும் இன்னியம் முதலான பல்வித இசைக்கருவிகள் இருந்துள்ளன.தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையில் 18 ஆம் பாடல் தமிழ்நெறியின் பண்பாட்டுக் கருப்பொருள்களான இசைக்கருவிகள் பற்றி விளக்குகிறது. தமிழ்ப்பண்ணிசை, மிடற்றிசை (வாய்ப்பாட்டு), நரம்புக் கருவியிசை (யாழ்) குழற்கருவியிசை (குழல், வாங்கியம்), முழவிசை (மத்தளம், தண்ணுமை, கொட்டு, பறை) ஆகியவை தமிழிலிருந்தும் தமிழர் வாழ்வு நெறியிலிருந்தும் பிரிக்கமுடியாதவை.

 

பின்னர் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டில்தான் வடக்கிலிருந்து கோதாவரிக்கரைக்கு வந்த ஆரியர்களான பிராமணர்கள்  தமிழைப்பிரித்து அந்தப் பகுதியில் தெலுங்காக மாற்றினர். தாங்கள் உருவாக்கியதான, ஒன்றுக்கும் பயனில்லாத, சமஸ்கிருதத்தின் வடிவில் புதிய எழுத்துக்களை தெலுங்குக்குக் கொடுத்து வடிவமைத்தனர். அவ்வாறே, பத்தாம் நூற்றாண்டில், கருநாடகப்பகுதித் தமிழைப்பிரித்துக் கன்னடமாக மாற்றினர். பதினொன்றாம் நூற்றாண்டில் மேற்குத் தமிழ்நாட்டுப் பகுதியை மலையாள மொழிபேசும் பகுதியாக மாற்றினர். இவற்றுக்கெல்லாம், அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் ஆங்காங்கே அதிகார மையங்களைக் கைப்பற்றுவதும் அவற்றின் மூலம் எண்ணற்ற சதிச்செயல்கள் செய்வதும்தாம்.

 

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த காரைக்கால் அம்மையார்தான் இசைத் தமிழின் முதல் இயலிசைப் புலவர் ஆவார்.. இவர் பாடிய திருவாலங்காட்டுத் திருப்பகங்கள் இரண்டும் (மூத்த திருப்பதிகங்கள்)  நைவளப் பண்ணிலும் இந்தளப் பண்ணிலும் அமைந்த இயலிசைப்பா பதிகங்களாகும். இவர் பாடிய இப்பண்கள், "அவரது காலத்திற்குப் பின்னால் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில் இசையை வளர்த்தவர்களுக்கு முன்னோடியாக விளங்கின". இப்பண்கள் இன்றும் பாடப்பெறுகின்றன.      

காரைக்கால் அம்மையாரின் பனுவல்களில் முதற் பதிகத்தின் ஒன்பதாவது பாடலில்,  ஏழு இன்னோசைகளுக்குமான தமிழ்ப்பெயர்கள் பதிவாகியுள்ளன. துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை என்பது அப்பகுதி.  அப்பாடலின் பொருள் துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை என்ற ஏழு பண்களையும் இசைத்து, சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணி, துந்துபி, தாளம், வீணை, மத்தளம் கரடிகை, தமருகம், குடமுழா, மொந்தை முதலிய வாத்திய வகைகளை இயக்கி அந்தப்  பண்களின் தன்மையோடு ஆடுகின்ற எங்கள் இறைவன் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருவாலங்காடேயாகும் என்பதாகும். 

 


துத்தங்கைக் கிள்ளை விளரிதாரம் உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்

சச்சரி கொக்கரை தக்கையோடு, தகுணிதந் தந்துபி தாளம்வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்தோல் தமருகம் குடமுழா மொந்தை வாசித்

தத்தனை விரவினோ டாடும் எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.

 

இவ்வினிய தமிழ்ப்பண்களை, அதுவரை இசையை வெறுத்திருந்த ஆரியம் கடத்திச்சென்று 'சப்தஸ்வரங்கள்' என்று பெயர் மாற்றிக்கொண்டது வேறொரு தனிக்கதையாகும்.

 

 





தமிழரின் தமிழிசை தொடர்பான அடிப்படை உண்மைகள் இவ்வாறிருக்கஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த நமது காரைக்காலம்மையாரை விட்டுவிட்டு, நமது திருவையாற்றுத் தமிழ் மண்ணில், பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், தமிழை வெகு தீவிரமாக வெறுத்தொதுக்கியவருமான தியாகப்பிரம்மத்தை இசைவிற்பன்னராகக் காட்டி விழாவெடுப்பதையும், அந்த விழாக்களில் நமது தமிழிசை  புறக்கணிக்கப்பட்டதையும் நாம் காண்கிறோம். 

எழில்மிகு பூம்புகாரை மீண்டும் நிறுவியவரும், நாற்பது ஆண்டுகள் ஆரியம் சதிசெய்து எதிர்த்து வந்த திருவள்ளுவர் சிலையை குமரிக்கடலில் நிறுவி, தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை இறுக்கி நிலைப்படுத்தியவரும், இலங்கைக்குள் நுழையக்கூடாது என்று 1960 களிலிருந்து அந்நாட்டு அரசால் தடைசெய்யப்பட்டிருந்தவருமான  கலைஞர் மீதான அடக்கமுடியாத சதுர்வர்ணவெறியின்பாற்பட்ட வன்மத்தின் காரணமாக, ஆரியம் இன்று புதியதோர் சதித்திட்டத்தை உருவாக்கி, அந்தச் சதிச்செயலை நடைமுறைப்படுத்த, தமிழர்களில் ஒரு கூட்டத்தைப் பயன்படுத்தி, கலைஞர் தமிழரல்லர், அவர் தெலுங்கர் என்று பரப்புரை செய்யத் தொடங்கியுள்ளது.

 

கலைஞர் தமிழர் அல்லர் என்றால், காலங்காலமாக இசைத்தமிழ் வளர்த்த தமிழ்க்குடிகள் எங்கே என்ற கேள்விக்கு இந்தக் கூட்டத்தினர் விடை தருவதில்லை.

 

தமிழர்கள் எவ்வாறு, தெலுங்கராக, கன்னடராக, மலையாளியாகப் பிரிக்கப்பட்டுக் கிடக்கிறார்களோ அதுபோல அன்றைய இசைத்தமிழ்க் குடிகள் அந்தத்த மொழிப்பிரிவுக்குள் இருக்கின்றன என்பதே உண்மை.  மேலும், கலைஞரைத் தெலுங்கர் என்று ஆந்திர மக்கள் சொல்லுகிறார்கள் என்று காணொளிகள் காட்டுகின்றனர். இது நகைப்புக்குரியது மட்டுமே.

 

கலைஞர் தமிழர் அல்லர் என்று கூறி அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் இருந்தது. அதனால் அவர்களுடைய ரசிகர்களும் சீடர்களும் உருவாக்கிய புதுக்கதைதான் கலைஞர் தெலுங்கர் என்பது. கலைஞரைத் தெலுங்கர் என்று ஏற்றுக்கொள்வது தெலுங்கர்களுக்கு ஆதாயம்தான். எனவே, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ரசிகர்கள் சொல்வதை அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டாடுகிறார்கள். அதனை ஜெயலலிதா ரசிகர்கள், அது ஒரு சான்று என்று காட்டுகிறார்கள். பேதமை. இதைவிட வேடிக்கையாக சட்டநாதன் குழுவின் அறிக்கையையெல்லாம் காட்ட முயல்கிறார்கள் இந்த அடிமைக்கூட்டத்தினர்.

 

அப்போதும் காலங்காலமாக இசைத்தமிழ் வளர்த்த தமிழ்க்குடிகள் எங்கே என்ற கேள்விக்கு இந்தக் கூட்டத்தினர் விடை தருவதில்லை.

 

சதுர்வர்ண வெறியர்களான நாக்பூர் கூட்டம் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் செய்யமுயலும் கொடுமைகளைவிடக் கொடுமையான செயலை, தமிழுக்கு எதிராக, இசைச்தமிழுக்கு எதிராக,  தமிழ் நாட்டுக்கு எதிராக இந்த ஆரிய அடிமைகள் கூட்டம் செய்துவருகிறது.

 

கலைஞரை வசைபாடுவதற்காகவே நேர்ந்து விடப்பட்ட இக்கூட்டம், தமிழிசையை, தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளை ஆரியர் மேலும் திருடவும், இசைத்தமிழ் வரலாற்றை ஆரியர் மேலும் சிதைக்கவும்,  உதவிசெய்து ஆரியருக்கு அடிமைச் சேவகம் செய்கிறது.

 

இது தமிழ்நாடு! தமிழ் நிலம்! உலகெங்கும் நாடுகள் 'தொன்றுதொட்ட தாயகக் கொள்கை' (Traditional Homeland Concept) என்ற அடிப்படையில்தான் அமைந்துள்ளன. இந்தத் தமிழ்நாட்டில் மாற்றாரைக் குடியேற்றம் செய்து தமிழர்களைச் சிறுபான்மையினராக ஆக்கிவிட்டால்கூட இந்த நிலத்தின் ஆட்சிமொழி தமிழாகத்தான், தமிழாக மட்டுமேதான் இருக்கும். தமிழ் என்ற மொழிக்கு தமிழ்நாடு என்பது நிலம் சார்ந்த அடையாளம். இந்த நிலத்திற்குள் வருபவன் தமிழ் கற்கவேண்டும், தமிழில் கற்கவேண்டும், தமிழைக் காக்க வேண்டும்.  இதுதான் 'தொன்றுதொட்ட தாயகக் கொள்கை' யின் அடிப்படை நியதியாகும்.

 

இதற்கெதிராகச் செய்யும் சதிகள் அனைத்தும் இனக்கொலை (Genocide), என்ற வகைப்படுத்தப்பட்டுள்ள இனவெறிசார்ந்த குற்றமாகும் (Racial Crime). அவ்வாறான குற்றம் செய்யும் வடஇந்திய ஆட்சியாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கப்படுவர்.

 

இன்றைய பா... கட்சி, காலங்காலமாக, ஜைன புத்தர் காலம் முதல், பலவித இனக்கொலைகள் செய்தவர்களின் வழிவந்தோருடைய கட்சி. அதனால்தான், வடவரை வரவழைத்துக் (Colonisation) குடியமர்த்தி , அவர்களுக்கு வீடுகளும் இலவசமாகக் கட்டிக்கொடுப்போம் என்று தேர்தல் அறிக்கையிலேயே கொக்கரிக்கிறது.

 

தமிழர்களின் வேலைவாய்ப்பைத் தமிழ்நாட்டிலேயே தட்டிப்பறித்துவிட்ட, தமிழரகளைத் தமிழ்நாட்டிலிருந்து துரத்திவிட்டு , இந்நிலத்தைத் தடசிணப் பிரதேசமாக இதை மாற்ற முயலும் ஆரியக் கொடியோர, தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையாவது, அவர்கள் செய்வது அனைத்துலகச் சட்டப்படி குற்றமாகும் என்பதே.

 

இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் காலங்காலமாகத் தமிழுணர்வோடு தமிழுக்காக தமிழருக்காக வாழும் பல நல்ல உள்ளங்களை, நா... சீமான் போன்ற ஆரிய உளவாளிகள் கூட்டங்கள்,  தமிழரிடமிருந்து பிரித்து வைத்து, தமிழருக்கெதிரான ஆரியச் சதிகள் நிறைவேறத் துணைபோகின்றன.

 

கலைஞரைத் தமிழர் அல்லர் என்று கயமைப்பரப்புரை செய்யும் இக்கூட்டம்,  ஜெயலலிதாவின் இமாலயக் கொள்ளையைப் பற்றி வாய் திறக்காமல், குடிகாரனைப்போல, எந்தக் கேள்விக்கும் விடைதராமல், திரும்பத்திரும்ப கலைஞர் தமிழர் இல்லையென்று சொன்னதையே சொல்லிக்கொண்டு ஆரியர்களுக்குத் தரகு வேலையாக தமிழ்த் துரோகப் பரப்புரைகளைச் செய்துகொண்டிருக்கிறது.



 

பொன்னியின் செல்வன் கதையில் பினாகபாணி என்று ஒரு இளைஞன் வருவான். அவன் ஒரு கொலை செய்துவிட்டு, அந்தக் கொலையைச் செய்தவன் வந்தியத்தேவன் என்று பொய்ப்பரப்புரை செய்வான். சில காலத்திற்குப் பிறகு வந்தையத்தேவன் தான் அந்தக் கொலையைச் செய்தான் என்று அவனே நம்பத் தொடங்கிவிடுவான். அதுபோல கலைஞருக்கு எதிராகப் பொய்ப் பரப்புரை செய்ய அனுப்பப்பட்ட உளவாளிக்கூட்டம் ஒன்று தற்போது தனது பொய்யை தானே நம்பத்தொடங்கும் மடமை நிலைக்குப் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது. தமிழர்களின் போராட்டக் களத்தை எதிரிகளுக்கு வசதியாக திசை திருப்பும்வேலை செய்துகொண்டிருக்கிறது. கயமை.

 


எதிரிகள் எதிரிகளை மதிப்பார்கள். ஆனால், எதிரிக்கூட்டத்திலிருந்து தங்களுக்கு உதவி செய்யும் துரோகிகளை இழிபிறவிகளாகவே நடத்துவார்கள். ஆனால், வரலாறு காட்டும் இந்த உண்மைகள் அந்த இழிபிறவிகளுக்குத்  தெரிவதில்லை. அவர்கள் ரோமாபுரி அடிமைகள் போல தொடர்ந்து அடிமைகளாகவே ஆரியர்களுக்கு Gladiator வேலை செய்துகொண்டிருப்பார்கள்.

 


தமிழ் வாழ்கிறது, காலங்காலமாக, எதிரிகளிடமிருந்தும் இவ்வாறான ஆரிய அடிமைத் துரோகிகளிடமிருந்தும் தப்பி!

 


தமிழ் வாழும்! தமிழ் கூறு நல்லுலகம், தமிழைக் கண்டு அஞ்சும் சதுர்வர்ண வெறியர் (Apartheidists) கூட்டத்தாரை அடக்கி வைக்கும். தமிழால் மட்டுமே அவர்களை அவ்வாறு அடக்கமுடியும; அதன்மூலமாக இவ்வுலகையே அன்பு சார் நல்லுலகாகத் தமிழ் மாற்றும் !!

 

சிலம்பும் வள்ளுவமும் காத்த அஞ்சுகம் முத்துவேலர் மகன் கலைஞர் தமிழரே

ஆரிய உளவாளிகளிடமிருந்து இசைத் தமிழைக் காப்போம் !!





Sunday, 6 February 2022

The Turban of Sikhs in France & the Hijab of Muslim girls in Karnataka

The agitation against students wearing hijab is unlawful and contains all the potentials of peace time genocide causing serious mental harm.

Reasonable and mature Indian citizenry should not brook this nonsense. It is their duty towards mankind to expose the duplicity of those who instigate this kind of agitation against Muslim girls and ensure that the nation remains civilised. 

If 'Hindu' children can wear 'janue' and other symbols in their forehead, there is nothing to bar the Muslim girls wearing hijab. 

The government of India which worked so hard from 2011 to 2016 to prevail upon France to permit Sikhs there to wear turban in public in that alien land, should intervene in Karnataka and enable the Muslim girls to wear the dress of their choice in their own land.

“Genocide was distinguished not only because of its collective target but also because of its multifaceted character. It was a comprehensive and systematic undertaking. As Lemkin put it, “Genocide is effected through a synchronized attack on different aspects of life of the captive peoples.” He enumerated the "techniques fo genocide" in eight "fields", political, social, cultural, economic, biological, physical, religious and moral. In the cultural field, he mentioned, among other steps, “prohibiting or destroying cultural institutions and cultural activities; by substituting vocational education for education in the liberal arts, in order to prevent humanistic thinking, which the occupant considers dangerous because it pro- motes national thinking.” - Page 18 - Cultural Genocide and the Protection of Cultural Heritage - Edward C. Luck


2011


2016



Sunday, 30 January 2022

வேதங்கள் பொய்யானவைதாம் என்று நிரூபித்து வரும் பிராமணர்கள் !

 

"Vedas are a worthless set of books", said Ambedkar. வேதங்கள் பொய்யானவைதாம் என்று பிராமணர்கள் காலங்காலமாக நிரூபித்துக் கொண்டே வருகிறார்கள்.

பூசகர் பணியில் பிராமணரல்லாதோரின் உரிமையை மறுப்பதற்கு ( ஒன்றுக்கும் பயனிலாத, சூதான, கரவெண்ணங்கொண்ட சிந்தனைகளின் வடிவமான) வேதப் புத்தகங்களைக்காட்டும் பிராமணர்கள், தங்களுடைய அபிலாஷைகளுக்கு வேதங்கள் தடையாயிருக்குமென்றால், அனைத்து வேத, வேதாந்தப் புத்தகங்களையும், அனைத்து பிராமணீய விதிகளையும். மூட்டைகட்டி ஒரு ஓரத்தில் கடாசிவிட்டு, காசுபண்ணச் செல்வதை வாடிக்கையாக்கி வைத்திருக்கின்றனர்.
பசு மாமிசத்தை, அதுவும் பசுவின் கன்றின் மாமிசத்தை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மூக்கைப்பிடிக்கத் தின்று கொண்டிருந்தார்கள் பிராமணர்கள். அவ்வாறு தின்பது புண்ணியம் என்று வேறு தங்களுக்குத் தாங்களே கூறிக்கொண்டனர். திடீரென்று பசுமாமிசம் சாப்பிடக்கூடாது என்று பரப்புரை செய்யலாயினர். எந்தத் தேதியில் திடீரென்று ஞானோதயம் வந்து , வேதத்தில் உள்ளதைப் புறக்கணிக்கத் தீர்மானித்தனர், யார் அந்த முடிவை எடுத்தார், என்ற கேள்விகளுக்கு இன்று வரை விடைகூற மறுக்கின்றனர். அந்த சாத்திரங்களைத் தலைமுழுகிவிட்டனர்.
பிராமண விதவைப்பெண்களைத் தலையை மொட்டையடித்து அன்று உட்காரவைத்தனர். . அது சாஸ்திரம் என்றார்கள். இன்று அதை விட்டுவிட்டனர். அந்த சாத்திரங்களைத் தலைமுழுகிவிட்டனர்.
1889 ஆம் ஆண்டு. 11 வயதுப் பெண்குழந்தை ஒன்று அதன் 35 வயதுக் கணவனால் உடலுறவின்போது இறந்துபட்டது. துணைக்கண்டம் முழுதும் கொதித்தெழுந்தது. குழந்தைத்திருமணத் தடைச் சட்டம் கொணரக் கோரிக்கைகள் எழுந்தன. அன்றைய பிரிட்டிஷ் அரசு உடலுறவுக்கான வயதை 12 க்கு உயர்த்தியது (Age of Consent Act, 1891). சனாதன வெறியரான திலகர் இது சாத்தரத்திற்குப் புறம்பானது என்றுகூறி முட்டாள்தனமாக எதிர்த்தார். “The common rule is for intercourse to take place on that very night when ( a girl ) has the first menstruation after having performed the homa sacrifice. This custom has been practiced for at least two thousand five hundred years since the ancient era of Sutras. If you want the Shastra, then this is the true way” (Kesari, 17.02.1891). இன்று யாரும் அந்த சாத்திரங்கள் புனிதமானவை என்று சொல்லவில்லை. அந்த சாத்திரங்களைத் தலைமுழுகிவிட்டனர்.
கடல்தாண்டிச் சென்றுவிட்டால் பிராமணன் தனது ஜாதியை இழந்துவிடுகிறான் என்று கூறி, தாங்கள் கடல்தாண்டிச் செல்வதைக் காலங்காலமாகத் தவிர்த்து வந்தனர் பிராமணர்கள். ஆனால் திடீரென்று, கடல்தாண்டிச் செல்வதை வழக்கமாக்கிக்கொண்டது மட்டுமின்றி, அவர்கள் சென்ற அயல்நாடுகளில், கோயில்கள் கட்டிக்கொள்வதும், அவற்றில் பூசகர்களாகப் பணியாற்றவும் முற்பட்டனர். அத்துடன், கடல்தாண்டுவதால் ஏற்படும் ஜாதி இழப்பைப் பற்றி அவர்கள் கவலை ஏதும் கொள்ளவில்லை. ஏனெனில் , அவர்களை ஜாதிப்பிரஷ்டம் செய்யும் வழக்கத்தை இங்குள்ள பிற பிராமணர்கள் கைவிட்டுவிட்டனர். கடல்தாண்டிச் சென்றால் ஜாதிப்பிரஷ்டம் ஆகிவிடும் என்று அவர்கள் உருவாக்கிவைத்திருந்த கொள்கை மிகத்தீவிரமாகக் காலங்காலமாக அவர்களால் கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், எந்தத் தேதியில் அந்தக் கொள்கை திடீரென்று கைவிடப்பட்டது, யார் அந்த முடிவை எடுத்தார், என்ற கேள்விகளுக்கு இன்று வரை விடை கூற மறுக்கிறார்கள். அந்த சாத்திரங்களைத் தலைமுழுகிவிட்டனர்.
வேதங்களின் அடிப்படையை என்றும் மதிப்பவர்கள் பிராமணர்கள் என்றால், புற்றீசல் போல உலகெங்கும் இவர்கள் சுவாமிநாராயன் கோயில்களைக் கட்டியிருக்கவே முடியாது. அப்படிக் கடல்தாண்டிக் கட்டியபின் அங்கு போய் பிராமணன் என்ற ‘அந்தஸ்தை’ நிலைநிறுத்திக்கொண்டு பூசகர் வேலை செய்யவும் முடியாது.
அஃதன்றி, இங்கு இந்தியாவில் இருக்கும் கடல்தாண்டா பிராமணர்களாவது வேதங்களையும் வேதாந்தங்களையும் மதிக்கிறார்களா என்றால், இல்லை என்றே அவர்கள் நடவடிக்கை தெரிவிக்கிறது. இங்குள்ள கடல்தாண்டா பிராமணர்கள், பிற கடல்தாண்டிய பிராமணர்களை, ஜாதிப்பிரஷ்டம் செய்து அவர்கள் பிராமணர்கள் அல்லர் என்று அறிவித்திருக்க வேண்டும். அவ்வாறு இவர்கள் தற்காலத்தில் செய்வதில்லை.
இவற்றால் விளங்கும் (அ)நீதி யாது?
வேதங்கள் பொய்யானவை என்பதை பிராமணர்கள் நன்றாகவே அறிந்துள்ளனர். அவற்றை அரசியல் காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்டு ஆதாயம் தேட வேண்டும் என்று அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்துள்ளது. எனவே, வேதங்களைப் புனிதம் என்றெல்லாம் அவர்கள் ஒன்றும் மதிப்பதில்லை. “Vedas are a worthless set of books” என்று அறிஞர் அம்பேத்கர் சொன்னார். தங்கள் கருத்தும் அதுவேதான் என்று பிராமணர்கள் அவர்களின் நடைமுறை வாழ்க்கையால் உலகுக்குத் தினந்தினம் தெளிவாக்கிக் கொண்டுள்ளனர். தங்களுடைய வசதிக்கும் வருமானத்திற்கும் சாதகமாக இருக்குமென்றால் வேதமுறைகளைப் பயன்படுத்திக்கொள்வர். அவை இவர்களுடைய வாழ்வியல் ஆசைகளுக்குத் தடையாக இருக்கவேண்டுமென்றால் ஓசையில்லாமல் புதைத்து மூடிவிடுவர்.
கி.பி. 1773 ஆகஸ்ட் மாதத்தில் இரகோபா என்று அழைக்கப்பட்ட இரகுநாத ராவ் மராத்திய நாட்டின் ஆறாவது பேஷ்வாவாகப் பணியேற்கிறார். அவருக்கு மக்களிடையே ஆதரவு இல்லை. இவர் பின்னாளில் எட்டாவது பேஷ்வாவாக வந்த பாஜிராவின் தகப்பனார் ஆவார். இவர் இரண்டு பிராமணர்களை தனது தூதர்களாக லண்டனுக்கு அனுப்பி தன்னை பிரிட்டிஷ் அரசு பேஷ்வாவாக அங்கீகரிக்கவேண்டும் என்று கோருகிறார்.
அவர்கள் திரும்பிவந்ததும், அவர்களுடைய பிராமணர் சமூகம் அவர்களை வழக்கம்போல சாதிப்பிரஷ்டம் செய்கிறது. ஏனெனில், கி.பி. 1624ல் சிவாஜி ஆட்சிக்கு வந்தபின் மனுநீதிப்படித்தான் ஆட்சி நடத்தப்பட்டது. சிலருக்கு பௌதாயன சூத்திரத்தின் படி மூன்று ஆண்டுகளுக்குத் தண்டனை அனுபவித்துப் பிராயச்சித்தம் செய்தால் ஜாதிப்பிரஷ்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். அவ்வாறு அந்த இரண்டு பிராமணர்களையும் தண்டனைக்கு ஆட்படுத்த பேஷ்வா ரகோபா தயாராக இல்லை. எனவே, பேஷவாவின்அழுத்தத்தின் பேரில் அந்த பிராமண சமூகம் ஒரு புதிய வழியை பிராயச்சித்தம் செய்வதற்குக் கண்டுபிடித்தது.
அதன்படி, தங்கத்தில் ஒரு பெரிய பெண்ணுறுப்பு செய்யப்பட்டு அதன் மூலமாக ஒரு பக்கத்திலிருந்து புகுந்து மற்றொரு பக்கத்திற்கு வருமாறு , கடல்தாண்டிச் சென்ற இரு பிராமணர்களும் பணிக்கப்பட்டனர். அவர்கள் அவ்வாறு புகுந்து வந்தபின் ஜாதிப்பிரஷ்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டு பிராமணர்களாக மீண்டும் ஏற்கப்பட்டனர். அதன்பின் அந்தத் தங்கப் பெண்ணுறுப்பு சிறுசிறு துண்டுகளாகத் துணிக்கப்பட்டு, பிற பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது. ஹிரண்யகர்ப தானம் முதலான பல நிகழ்வுகளைக் காணும்போது , இவ்வகையான நிகழ்வுகள் புதிதல்ல என்பதும், காசுக்காக எல்லா சாத்திரங்களும் வளைக்கப்படும் என்பதும், அவை புனிதமானவை அல்ல என்பதும் தெளிவாகும். எனவே, எந்த சாத்திரத்தையும் காட்டி பிராமணர்கள் மற்றவர்களுக்குப் பூசகர் உரிமையை மறுக்க முடியாது என்பது நமக்குத் தெரியும் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
இந்துக் கோயில்களில், பிராமணர்கள் மட்டுமே பூசகர்களாகப் பணியாற்றும் அனைத்துக்கோயில்களிலும், அனைத்து சாதிப் பிராமணரல்லாதோரும் பூசகர்களாக அனைத்து நிலைகளிலும் பணியாற்ற வகை செய்ய வேண்டும்
It was August 1773. Raghunath Rao @ Ragoba assumes power as Peshwa. “Ragoba lost no time in proclaiming himself the Peshwa in succession to the murdered Narayanrao” (Page 287 - How India lost her Freedom – Pandit Sandarlal – SAGE Publishing). He did not have the support of the locals and, therefore, depended on the help of East India Company. “Rughonath Rao, sixth Peishwa, plays an important part in the after relations of the English with the Mahrattas. He is frequently mentioned in the records of the eighteenth century under the name of Ragoba, but Rughonath Rao is his correct name. He was the father of Baji Rao, the eighth Peishwa and last of the dynasty, who was dethroned in 1818” (Page 418 & 419 – India and the Frontier States of Afganisthan, Nipal and Burma – Vol. I – J. Talboys Wheeler ).
This Ragoba sent two Brahmins as ambassadors to England to seek support for his Peshwaship. When they returned, they were not accepted by their community as Brahmins, as they were deemed to have lost their caste / varna –status. They were ostracized straightaway. After all, it was Manusmiriti that was rooling the roost in the Maratha empire, ever since Shivaji Maharaj came to power in 1624 AD. And, Manu had said those who undertook voyages by sea should be avoided by others. (Chapter III. Verse 158). Baudayana Sutra (II.1.2.2) also condemned sea voyage as an ‘offence’ and imposed the penalty of loss of caste. It mandated a cooling-off period of three years. During this period, those who committed the offence of “making voyages by sea”, “shall eat every fourth meal-time a little food, bathe at the time of the three libations (morning, noon, and evening), passing (the day) standing and (the night) sitting. After the lapse of three years they throw off their guilt” (II.1.2.10).
Ragoba, the Peshwa, was, however, not prepared to accept this kind of penalty for his Brahmin ambassadors. He could not afford to leave his ambassadors in the lurch. He pressurized the priests for a solution. After all, public money in the treasury was at his disposal then. So, the priests thought over the issues and came out with a way out, praayaschit (repentence). And, that was totally novel and entirely different from the one prescribed in the Baudayana Sutra.
“The famous Brahman Ragoba, the father of the last of the Mahrataa Peshwas....sent two Brahman ambassadors to England. On their return, they required purification from having passed through, and lived in, debasing countries. They were regenerated by a transit through a golden yoni, made expressly for the purpose – and of course with other presents to an immense amount, given to the Brahmans”. (Page 506 – Oriental Fragments – Edward Moor – 1834). “...two Brahmins, whom he (Ragoba) sent as ambassadors to England, were, on their return to Hindostan, compelled to pass through the sacred yoni, or female lingam, made of the finest gold. After performing this ordeal, and making valuable presents to the Brahmins, they were restored to the privileges of their caste, which they had lost, by the impurities contracted in travelling through so many polluted countries. The celebrated Sevajee (Shivaji), in the seventeenth century, on the day when he assumed the Mahratta sovereignty, was publicly weighed against gold; his weight was equal to that of sixteen thousand pagodas; which, with a hundred thousand more, were distributed among the Brahmins” (Page 240 – Oriental Memoirs – Vol.I – James Forbes – Second Edition – 1834. First Edition probably in 1810, as could be discerned from Page viii narrating the biographical sketch of the author). Refer also to the book titled, “Works relating to India” published by Wm. H. Allen and Co, 7, Leadenhall Street, London in October 1814.

Monday, 1 November 2021

தமிழ் நிலமும் 'தலைமைச் செயலகமும்' தமிழ் நாடும்!

கி. மு. 1200 வரை, தென் குமரிக்குத் தெற்கே உள்ள கபாடபுரம் முதலாக வடக்கில் உள்ள பனிமலை வரை தமிழ் பேசும் நிலப் பரப்பாகத்தான் இருந்தது. (It is surmised not incorrectly that all the languages of India could be traced to one original family of language, and this family cannot be Indo- Germanic (Indo- Aryan) as is assumed, but native to the soil having its birth in Neolithic times, if not earlier. This is certainly true if we make a comparative study of the North- Indian and South- Indian vernacular dialects, for, in both, we see the same fundamental grammatical structures” (V. R. Ramakrishna Dikshidar-Pre- historic South India- Page 179). “These facts can only prove that people speaking dialects allied to Tamil once inhabited the whole of India” (P.T.Srinivasa Iyengar-The History of Tamils page 2).

மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் (பின்னாளில் தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள்) இந்தத் துணைக் கண்டத்தில் நுழைந்த பிறகு மொழித் தாக்குதல்கள் நடைபெறலாயின. இந்த துணைக்கண்டத்திற்குள் நுழையும் வரை எழுத்து என்ற ஒரு அமைப்பையே  அறியாத ஆரியர்கள் இங்கு இருந்த தமிழ் மக்களிடமிருந்து எழுத்துக் கலையைக் கற்று கொண்டார்கள். (“We have no evidence to show that the Vedic people had any knowledge of writing (or building cities) as the Indus Valley people had.” (Surendaranath Dasgupta -The Cultural Heritage of India – Vol.3 – The Ramakrishna Mission Institute of Culture)

அவர்களுடைய வேதகால வேதமொழியில் உள்ள சொற்களும் இங்கு பேசப்பட்ட தமிழும் கலந்து பல திரிபு மொழிகள் உருவாகின. (Owing to the wide prevalence of the union of Aryan males with non-Aryan females, the speech (as well as the social and religious life) of the Aryan people began to be modified very early on Indian soil”. There took place “the borrowing of the cerebral consonantal sounds from non- Aryan speech” (Dinesh Chandra Sirkar-ibid-page108). அவை பாலி, மைதிலி, ஆர்தமாகதி, மாகதி, சௌரசேனி, போன்றவையாகும்.

மகாவீரர் மற்றும் புத்தர் காலத்தில் ஆரியர்களுடைய வல்லாதிக்கச் செயல்பாடுகள் தாக்கப்பட்டுத் தகர்க்கப் பட்டதால் அரண்டு போன ஆரியர்கள் தங்கள் இனத்தின் அடையாளத்தைப்  பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால்  தங்களுக்காக ஒரு மொழி தேவை என்ற சிந்தனையால் உந்தப்பட்டு புதிதாக ஒரு மொழியை உருவாக்கினார். அதுவே சமஸ்கிருதம் என்று அவர்களால் பெயரிடப்பட்டது. சமஸ்கிருதம் என்றால் தெளிவாக உருவாக்கப்பட்டது (Perfectly  created) என்று பொருள். அவ்வாறு தங்களுக்கான ஒரு மொழியை எழுத்து வடிவத்தால்  உருவாக்கிக் கொண்டபின் அதற்கு முன்பு பேசப்பட்டு வந்த பாலி,   மாகதி,   மைதிலி, முதலான மொழிகளூக்கு  பிராகிருதம் என்று பெயரிட்டு அழைக்கலாயினர். பிராகிருதம் என்றால் முன்பே உருவாக்கப்பட்டவை (Previously  created) என்று பொருளாகும்.

இதன் காரணமாக பனிமலை வரை பரவியிருந்த தமிழ்பேசும் நிலப்பரப்பு விந்திய மலைக்கு தெற்கு பகுதிகக்கு மட்டுமாகக் குறைந்தது. வட பகுதியில் நடந்த இந்தத் தாக்குதல்கள் ஒருபுறம் இருக்க, தென்பகுதியில்,  இயற்கைச் சீற்றத்தால், பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடு கொடுங்கடலால்  விழுங்கப்பட்டது (சிலப்பதிகாரம்).  இதனால் தமிழ் நிலத்தின் பரப்பளவு தெற்கிலும் குறைந்தது.

தொடர்ந்து வடக்கில், மகாராஷ்ட்ரி என்ற திரிபு மொழியால் (one of the Prakrits) தமிழ் பேசிய நிலத்தின் பரப்பு மேலும் குறைந்தது. பின்னர் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் பிராமணர்களால் சமஸ்கிருத எழுத்து அமைப்பில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட தெலுங்கு மொழியால் தமிழ் நிலத்தின் எல்லை மேலும் சுருங்கியது.

பின்னர் பத்தாம் நூற்றாண்டில் அதே போலக் கன்னடம் என்ற மொழி உருவாக்கப்பட்டு தமிழ் பேசும் நிலத்தின் பரப்பளவு மேலும் குறைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் வேங்கடமும் தென்குமரியும் தமிழ் நிலத்தின் எல்லைகளாக இருந்தன. பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில் மலையாளம் என்ற மொழி உருவாக்கப்பட்டு தமிழ்பேசும் நிலத்தின் பரப்பு மேலும் குறுக்கப்பட்டது.

பின்னர் 1956 ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. அப்போது மற்ற மாநிலங்கள் பறித்து எடுத்துச் சென்றது போக மிச்சமிருந்த நிலம்தான் தமிழ் நிலமாக 01.011.1956 முதல் இன்று வரை உள்ளது.

இந்த நிலப்பரப்பை இன்னும் குறைப்பதற்கு சதுர்வர்ணக் கொத்தடிமைகள் இன்றும் சதி செய்துவருகின்றனர். பொன் . இராதாகிருஷ்ணன் என்ற பா. ஜ. க. காரர் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் சேர்ந்துள்ளதைப் பற்றி மிகவும் வருந்துகிறார். இது கேரளாவுடன் இணைந்திருக்கவேண்டும் என்கிறார்.



ஆக, 01.11.1956 நிகழ்வில் தமிழர்கள் கொண்டாடுவதற்கு ஏதும் இல்லை. தமிழ் பேசும் நிலப்பகுதியில் 3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து நாம் நமது நிலங்களை இழந்து வந்திருக்கிறோம் என்பதுதான் வரலாறு காட்டும் உண்மையாகும்.

தமிழர்களுக்கான நிலப்பகுதி தமிழால் என்றைக்கு இறுக்கி நிலைப்படுத்தப் பட்டதோ (Process  of  consolidation) அந்த நாள் மட்டுமே கொண்டாடப் படவேண்டிய நாள்.

தமிழுக்கும் தமிழகத்திற்கும் மறுமலர்ச்சிகக்கு வித்திட்ட ஆண்டு 1967 தான். தமிழின எதிரிகளும் துரோகிகளும் கண்டு அஞ்சுவது தமிழ் நாட்டின் நிலப்பரப்பு பற்றி அல்ல. தமிழின அடையாளத்தைக் கண்டுதான் எதிரிகள் அஞ்சுகின்றனர்.

தமிழர்கள் அந்த அடையாளத்தைப் போராடி வென்றெடுத்தது தமிழ் நாடு என்று தமிழக்கத்திற்குப் பெயர் சூட்டப்பட்ட 18.07.1968 அன்றுதான். அன்றுதான் தமிழ் நாடு பிறந்தது. தமிழர்களின் வெற்றி நாள் அது.

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக் கோரி சங்கரலிங்கனார் உண்ணா நோன்பு நோற்று 13.10.1956 அன்று உயிர் துறக்கிறார்.


 இந்த மாநில அரசு, காங்கிரஸ் அரசு, அசையவில்லை. ஏனெனில், டெல்லியில் ஆரியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரஸ் தர்பார் அந்தப் பெயருக்கு எதிரியாக இருந்தது. அந்தப் பெயரைக்கண்டு அஞ்சியது. மாநில அரசு அன்று அந்த டெல்லி தர்பாரின் கைப்பாவையாக மட்டுமே இருக்க முடிந்தது. தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் காலங்காலமாக, உரிமைப் போராட்டத்தின் போது செயல்பட்டு வந்த தமிழ் நாட்டுக் காங்கிரஸ் காரர்களைப் பயன்படுத்திக்கொண்ட வட இந்தியர்கள், 1947 க்குப் பின்னர், அவர்களை அவமதிக்கத் தொடங்கினர். தமிழ் நாடு என்று இந்தத் தமிழ் நிலத்திற்குப் பெயர் வைப்பதை எதிர்த்தனர். 

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்காக, 1962ல் டெல்லி பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட சட்ட முன்வரைவு வட இந்தியர்களால் தோற்கடிக்கப் பட்டது. பின்னர் 1964 ல், இங்குள்ள சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட சட்ட முனவரைவும் வடவர்களின் அடிமைகளாக இங்கே இருந்த காங்கிரசுக் காரர்களாலேயே தோற்கடிக்கப்பட்டது.

தி. மு. க. 1967 ல் ஆட்சிக்கு வந்த பின்னர், 14.04.1967 அன்று கோட்டையில் முதலில் தமிழில் ‘தலைமைச் செயலகம்’ எனப் பெயர்ப் பலகை வைக்கப் பட்டபோது தமிழகத்தில் அது மிகப் பெரும் உணர்ச்சி அலைகளை ஏற்படுத்தித் தமிழர்களுக்குப் புத்துணர்வு ஊட்டிப் புளகாங்கிதம் அடையச் செய்ததை அன்றைய காலத்தில் வாழ்ந்தவர் அனைவரும்அறிவர்.


இதனைத் தொடர்ந்து தமிழ்ச் சொல்லாட்சிகள் பெரும் அளவில் செய்யலாக்கப்பெற்றன. ‘சபாநாயகர்’ அவைத்தலைவர் ஆனார்; ‘மகா கனம் பொருந்திய’ என்பது ‘மாண்புமிகு’ என்று ஆனது; எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது நனவாக்கப் பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை உருவாக்கப்ப்பட்டது. ‘தாசில்தார்’ வட்டாட்சியர் ஆனார்; RDO கோட்டாட்சியர் ஆனார்; ஜில்லா கலெக்டர் மாவட்டாட்சியர் ஆனார்; 'குறளகம்' உருவானது; 'எழிலகம்' உருவானது. தமிழில் அலுவலகப்பணி செய்யும் அரசு ஊழியர்களுக்கு விருதுகள் கொடுக்கப்பெற்றன. 

பின்னர். சட்டமன்றத்தில் 18.07.1968 லும் பாராளுமன்றத்தில் 23.11.2918 லும் தமிழகத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்கும் தீர்மானம் நிறைவேறியது. அன்றைய 'தலைமைச் செயலகம்', 'தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்' என்றாகி மிளிர்ந்தது. 


பின்னர் 01.12.1968 ல் நடைபெற்ற கொண்டாட்ட விழாவில் அண்ணா சங்கரலிங்கனாரின் ஈகத்தை நினைவு கூர்ந்து நன்றியும் வணக்கமும் தெரிவித்தார். மூவாயிரம் ஆண்டுகளாக பலவித ஆக்கிரமிப்புக்களுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்த தமிழினம், 1956 வரை நிலங்களை இழந்துகொண்டேயிருந்த  தமிழினம் பெற்ற முதல் வெற்றி 18.07.1968 அன்று, தமிழ் நிலம், தமிழ்நாடாகப் பரிமளித்த நாளேயாகும். அதுவும் மக்களாட்சி முறை வந்தபின், மக்களாட்சி முறையினால், பெற்ற பெரு வெற்றி.  தமிழ்நாடு பிறந்த நாள் அதுவே.

1965 முதல் தமிழின எழுச்சியைக் கண்டிருந்த வடவர்கள் தங்களது சதிச் செயல்களை அன்றைய காலகட்டத்தில் நிறுத்திக் கொண்டனர். தமிழ் மக்களுடைய எண்ணம், விருப்பம், ஆகியவற்றைத்  தமிழ் மக்கள் நிறைவேற்றிக்கொள்ள வடவர்கள் தடையாக இருக்க முடியாது என்று வடவர்களுக்கும், இங்கிருந்த தமிழ்த் துரோகிகளுக்கும் தமிழ் மக்கள் உணர்த்திய நாள் 18.07.1968.

இன்றும் காவிக் கொடியோர் கூட்டத்தில் சிக்கிக் கொண்டுள்ள தமிழ் நாட்டு அடிமைகள், பா. ஜ. க. எதற்காகத்  தமிழ் நாடு என்னும் பெயரை தட்சிணப் பிரதேசம் என்று மாற்ற முனைகிறது என்பது பற்றி யோசிப்பதில்லை. யோசிக்கும் தமிழர்கள்தான் காவிக் கொடியோர் கூட்டத்தில் சேரவே மாட்டார்களே.

தமிழனின் உணர்வையும் விருப்பத்தையும் தமிழனால். தன்னுடைய வழிவினால், அவனே நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதைத் தமிழன் உலகுக்கு உணர்த்திய நாள் 18.07.1968. தமிழர்களின் எதிரிகள் அஞ்சுவது 01.11.1956 ல் நடந்த நிகழ்வு பற்றி அல்ல; 18.07.1968 ல் நடந்த நிகழ்வு பற்றித்தான்.

எதிரியே மிகச் சிறந்த ஆசான் என்பது பழமொழி. எதிரியின் செயல்களைக் கூர்ந்து கவனித்தாலே, தமிழர்களுக்கு முகாமைத்துவம் வாய்ந்த நாள் எது என்பது எளிதில் விளங்கிவிடும். 

உலகில் பல பகுதிகளில் இன வேறுபாடு காரணமாகப் பல போர்களும் போராட்டங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால், இந்தத் துணைக்கண்டத்தில், தமிழர்கள் எதிர் கொள்ளும் எதிரிகள் சதிச் செயல்கள் மூலமாகவே தங்கள் வேலைகளைச் செய்து பழக்கப்பட்ட சதிகாரர்கள். காலங்காலமாகப் பஞ்சமா பாதகங்களைத்  தொடர்ந்து செய்துவருபவர்கள்.

அவர்களின் சதிகளிலிருந்து தமிழையும், தமிழ் நாட்டையும் காப்பதற்கு, தமிழர்கள் எழுச்சியோடு போராடி, எதிரிகளை வென்று, தமிழ்நாடு என்ற நமது அடையாளத்தை மீட்டெடுத்து  (The date of completion of the process of consolidation) இறுக்கி நிலைப்படுத்திய  ஜூலை 18 ஆம் நாளே வெற்றி நாளாகக் கொண்டாடப் பெறவேண்டிய நாள். 

 வெல்க தமிழ் நாடு! வெல்க அறம் !! வெல்க மாந்த நேயம்!!!


பி. கு: 1974 & 1976 ல் கச்சத்தீவை மத்திய அரசு அதிகாரிகள் சிங்களர்களுக்கு ஆதரவாக சதிசெய்து தமிழர்களிடமிருந்து பறித்துக் கொடுத்தது தனி வரலாறு.